உலக ஒப்பனைக்கு
ஒலமிடுபவர்களே……
கனக்கும் நெஞ்த்தோடும்
கலங்கும் விழிகளோடும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
கண்ணீரும் செங்குருதியும்
சகதியாகிப்போன
என் மண்ணில்
காற்றோடு கலந்துவிட்ட
என் உறவுகளுக்காக மீண்டும்
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
உலகமே சேர்ந்தது
என் இனத்தை
குழிதோண்டி புதைத்தது
இறந்தவரை நினைத்து
கதறுகிறேன் - மிகுதியாய்
இருப்பவரை நினைத்து
கலங்குகிறேன்
கொடிய இன வெறியனுக்கு
கை கோர்த்து நின்றது
கொடுங்கோல் ஆட்சிக்காக - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
தமிழ் தாயின்சேலை தொட்டுழுக்க
தன்மானமிக்க தமிழன் தலைகுனிய
தறிகெட்டு ஓடியது சர்வதேசம்
இரவிரவாய் ஒலமிட்டு காலமது
எத்தனை கொடுமை அது
வன்னி மக்கள் உணர்வை
வார்த்தையால் வரைய முடியுமா?
என்னால் எழுத பலமில்லை
இன்னமும் என் விழியினுள் உறுதியாய்
பதிந்திட்ட நிஜங்கள் - இதனை நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
மாவிலாறு தெட்டு முள்ளிவாய்க்கால் வரை
உலகமே கண்டு மௌனித்தது
உண்மையை உறங்க வைத்தது
கை கூப்பி நின்று கதறினர் ஜ.நா நேக்கி
இரக்கமும் பரிவும் காட்ட
அருகதையற்றவரா?
நச்சு வாயு அடித்து கொன்று
நாசமாக்கிய என் உறவுகளை – நினைத்து
கண்களை மூடி
கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்
- குட்டிசுபா
எதிர்வரும் நிகழ்வுகள்
24/7 - அவுஸ்திரேலியாவில் மாமனிதர் எலிசேயர் நினைவுநாள் விரிவுரைகள்
யேர்மனியில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு . 24.07.10 எசன் நகரில் ; 25.07.10 பெர்லின் நகரில்
தோள்கொடுப்போம் துயர்துடைப்போம் - Rasana
பெல்ஜியம்: தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்தும் விளையாட்டுப்போட்டி.
17/7 - அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தேசிய வருடாந்தப் பொதுக் கூட்டம்
பிரான்சில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு.
புறநானூறு
மாவீரர் நினைவு மெய்வல்லுனர் போட்டி - 2010
உறுதிப்பூங்கள் எழுச்சிக்கலை நிகழ்வுகள்
அக்கினித் தாண்டவம் 2010
சிறப்புச் செய்திகள்
Jul 15, 2010
போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி தகவல்
போராளிகளை தாம் மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, எந்தவொரு மனித உரிமை அமைப்புகளையோ, தனி நபர்களையோ அவர்களைப் பார்வையிட...
Jul 14, 2010
திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச! "சாகும்வரை உண்ணா நோன்பு"
ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு
Jul 13, 2010
அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் தமிழீழத்தை சேர்ந்த பிராமி ஜெகன் போட்டியிடவுள்ளார்.
அவுஸ்திரேலிய செனட் சபைக்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற இவ்வேளையில், பிராமி ஜெகன் என்னும் 30 வயதான இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும் அத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
Jul 12, 2010
தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?
தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு..
Jul 9, 2010
கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்
புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்...
No comments:
Post a Comment