Friday, July 16, 2010

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம் சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...

விடிந்தால் ம‌டிவோமா?


இல்லை

ம‌டிந்தால் விடியுமா? யென‌

ம‌ர‌ண‌ அச்ச‌த்தின் மிச்ச‌மாய் நின்ற‌

ம‌க்க‌ள் வெள்ள‌ம்...



காட்டிக்கொடுத்த‌ த‌மிழ‌னின் வினையால்

காட்டிய‌ இட‌த்திற்கு வ‌ந்தான் த‌மிழ‌ன்

கூடிய‌ இட‌த்தில் வீழ்வான் த‌மிழ‌ன் யென‌

ராஜ‌ ப‌ட்சிக‌ள் மாமிச‌ம் திண்ண‌

வ‌ட்ட‌ம‌டித்த‌ சூட்ச‌ம‌ இட‌ம்....





கோடி செல‌வுக‌ள் செய்து த‌யாரித்த‌

உயிர்கொல்லி ஆயுத‌ம் உத‌வுமாயென்று

வ‌ல்ல‌ர‌சு நாடுக‌ள் அள்ளிக் கொடுக்க‌...

ப‌திலுக்கு க‌ருகிய‌ எம் ம‌க்க‌ளை வாரி கொடுத்த‌

த‌மிழ‌னுக்கு வேத‌னைக் கூட‌ம்

சைனாவுக்கோ சோத‌னைக்கூட‌ம்...



த‌டை செய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌திற்கு

அங்கு த‌டைக‌ள் இல்லை

த‌மிழ‌னை அழிப்பதே அவ‌ர்க‌ளின்

த‌லையாய‌ கொள்கை....





போர் ம‌ரபு கூறிய‌ முதியோர், சிறியோர்?

போர் ம‌ர‌பு மீறிய‌ குற்றுயிர் ம‌ர‌ண‌ம்

க‌ண்டும் காணாத‌ ஐநா சாச‌ன‌ம்

க‌ட்டிக் காத்து

காட்டி கொடுத்த‌து இந்திய‌ சீத‌ன‌ம்



ஆயிர‌க்க‌ண‌க்கில்

ம‌க்க‌ளைக் கொன்று

அழித்தொழித்த‌

முள்ளிவாய்க்காலில்

பெறுக்கெடுத்த‌ ம‌னித‌ரெத்த‌ம்

உல‌க‌த் த‌மிழ‌ர் நெஞ்சில் பாய்ந்து

வ‌ள‌ர்த்தெடுக்குது த‌மிழிழ‌த்தை...

No comments:

Post a Comment