எவரிடமும் கருணையில்லை
வக்கிரமும் வஞ்சனையும் படிந்த
முகங்களிடம் நான் அறிமுகமாகிறேன்
என்னை சுற்றிலும்
மனித மனங்களை தின்று குவிக்கும்
வேட்டைக்காரர்கள் இருக்கிறார்கள்
நான் ஏன் அப்பா இருக்கிறேன்
எனக்காய் யார் இருக்கிறா?;
நான் மீண்டும் ஏன் உயிர்க்கிறேன்
என்னை பார்க்கும் போதெல்லாம்
அவர்கள் முகத்தில் இரத்த ஒட்டத்தை
பகீஷ்கரிப்பு செய்கின்றார்கள்
என்புன்னகையை பார்ப்பவர்கள்ளில்லை அவர்கள்
என் வாழ்வை சிந்திப்பவர்களில்லை அவர்கள்
நான் ஏன் அப்பா இருக்கிறேன்
எனக்காய் யார் இருக்கிறாh?;
சிறைப்பிடித்தவர்கள் என்உயிரையும்
பிடுங்கி எறிந்திருக்கலாம்
தங்கள் வீடு குறித்தும்
தங்கள் கோடிகள் குறித்தும்
தங்ககள் நாற்றங்கள் குறித்தும்
யாரும் பேசுவதாயில்லை
இந்த வக்கிரம் பிடித்த மண்ணில்
ஏன் அப்பா என்னை நடமாட விட்டுஇருக்கிறாய்
எனக்காய் யார் இருக்கிறார்?
வெளிச்சத்தில் என் புன்னகையை
அறிமுகப்படுத்த விரும்புகிறேன்
வீதியோரத்தில் ஆனந்தமாய்
நடந்து வர ஆசைப்படுகிறேன்
மகிழ்ச்சியான ஏக்கங்கள்
கானல் நீராய் போகின்றன
கடைசி வரை போராடுகிறேன்
காலம் என்னை காதலிக்கும் என்று
அழகான வாழ்வு எப்படியிருக்கும்?
நான் ஏன் அப்பா இருக்கிறேன்
எனக்காய் யார் இருக்கிறார்?
உணர்ச்சியாய் உள்ள சொற்களைத்தவிர
என்னிடம் எதுவுமில்லை
ஒடுக்கமுடியாதஉண்மைக்குரலாய்
உலகத்தின் முற்றத்தில் நான்
ஏழு கடலும் எட்டாத வானிலும்
இன்னமும் எத்தனை பேர்
உலக ஒப்பனைக்காக
ஏன் அப்பா என்னை பெற்றொடுத்தாய்
இன்னமும் ஏன் வாழ்ந்திட வேண்டும்
நான் ஏன் அப்பா இருக்கிறேன்
எனக்காய் யார் இருக்கிறார்?
- குட்டிசுபா
எதிர்வரும் நிகழ்வுகள்
24/7 - அவுஸ்திரேலியாவில் மாமனிதர் எலிசேயர் நினைவுநாள் விரிவுரைகள்
யேர்மனியில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு . 24.07.10 எசன் நகரில் ; 25.07.10 பெர்லின் நகரில்
தோள்கொடுப்போம் துயர்துடைப்போம் - Rasana
பெல்ஜியம்: தமிழர் பண்பாட்டுக் கழகம் நடாத்தும் விளையாட்டுப்போட்டி.
17/7 - அவுஸ்திரேலிய தமிழர் பேரவையின் தேசிய வருடாந்தப் பொதுக் கூட்டம்
பிரான்சில் புறநாநூற்றுக் கலை நிகழ்வு.
புறநானூறு
மாவீரர் நினைவு மெய்வல்லுனர் போட்டி - 2010
உறுதிப்பூங்கள் எழுச்சிக்கலை நிகழ்வுகள்
அக்கினித் தாண்டவம் 2010
சிறப்புச் செய்திகள்
Jul 15, 2010
போராளிகளை நாய்கள் என்று திட்டி வதைக்கும் படையினர் - பி.பி.சி தகவல்
போராளிகளை தாம் மிகவும் சிறப்பாகப் பராமரிப்பதாகக் கூறிவரும் சிறீலங்கா அரசு, எந்தவொரு மனித உரிமை அமைப்புகளையோ, தனி நபர்களையோ அவர்களைப் பார்வையிட...
Jul 14, 2010
திலீபன்; "கலைஞர்"; வீரவன்ச! "சாகும்வரை உண்ணா நோன்பு"
ஈழத் தமிழர்கள் தொடர்பில், கடந்த கால்நூற்றாண்டு காலத்தில் மேற் கொள்ளப்பட்ட/படும் "சாகும்வரை உண்ணா நோன்பு" போராட்டங்கள் மூன்று ஆகும். இதில் முதலாவதாகவும் இதயத் தூய்மையுடனும் ஆரம்பிக்கப்பட்டு
Jul 13, 2010
அவுஸ்திரேலிய செனட் சபைத் தேர்தலில் தமிழீழத்தை சேர்ந்த பிராமி ஜெகன் போட்டியிடவுள்ளார்.
அவுஸ்திரேலிய செனட் சபைக்கான தேர்தல் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்ற இவ்வேளையில், பிராமி ஜெகன் என்னும் 30 வயதான இலங்கைத் தமிழ்ப் பெண்மணியும் அத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.
Jul 12, 2010
தமிழரைக் காக்க இலங்கை செல்ல தமிழக இளைஞர்களை அனுமதிக்கத் தயாரா?
தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு..
Jul 9, 2010
கறுப்பு ஜூலை – போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி லண்டனில் இரவுநேரப் போராட்டம்
புலம்பெயர்ந்த தமிழ் மக்களும், அமைப்புக்களும் கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்கள் காரணமாக சிறீலங்கா அரசு புரிந்த போர்க் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் அம்பலத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன்...
No comments:
Post a Comment