Friday, March 18, 2011

என் காதல் ஜெயிக்கப் போவது இல்லை...

கண்ணிமைக்காமல் கைபேசியை பார்த்துக்கொண்டு உன் குறுஞ்செய்திக்காக கடுந்தவம் இருந்த நாட்கள் உண்டு...

என்னை யாரன்று தெரியாமல் பகல்கனவோடு பைத்தியக்காரியைப் போல் வாழ்ந்ததுண்டு...
கள்ளமில்லா என் காதலை கவிதையாய் சொல்லிட மனம் நினைப்பதுண்டு...
பெண்மையின் நாணமும் அங்கே தடுப்பதுண்டு...

உறவுகளிடம் கூட சொல்ல முடிந்த என் காதல் உன்னிடம் மட்டும் ஊமையாக...

யாரைப் பார்த்தும் வராத மாற்றம்
உன்னைப் பார்க்கும் போது மட்டும் da...
உன் நினைவுகள் என்னை கொல்லும் போது
கண்ணீர் கூட சுகமாகத்தான் இருந்ததடா...
என் காதலுக்கு காரணமும் தெரியலடா...
வார்த்தையை தொலைச்சிட்டு கண்ணீரோடு தோழியின் மடியில் குடிகாரனைப் போல் உனக்காக புலம்பியதுண்டுடா.....
இது உண்மை தானானும் புரியலடா...

சொல்லாத என் காதல் பொய்யும் இல்லை..
சொல்ல தைரியம் இல்லாத என் காதலும் ஜெயிக்கப் போவதும் இல்லை ...

No comments:

Post a Comment